Thursday 7 October 2010

இட்லி சாம்பார் - Idly Sambar

தேவையானவை :


வேகவைக்க:


கத்திரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - 1 
காரட் - 1
பச்சைமிளகாய் - 5
வெங்காயம் - 1
தக்காளி - 5 
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
மஞ்சள் பொடி
உப்பு
 ----------------------------------
சாம்பார் மேல் பொடி -  2 ஸ்பூன்
இட்லி மாவு - 3 ஸ்பூன்
வெல்லம் (Optional)


தாளிக்க:


கடுகு
வெந்தயம்
சீரகம்
பெருங்காயம்
கருவேப்பில்லை
--------------------------------------
கொத்தமல்லி தழை


செய்முறை :

காய்களை கழுவிவிட்டு சிறியதாக அரிந்து பருப்பு, உப்பு, பச்சை மிளகாய்,மஞ்சள் பொடியுடன் தண்ணீர் சேர்த்து Cooker ல் 3 விசில் வைக்கவும்.

Pressure இறங்கியவுடன் நன்கு மசித்து விட்டு (இப்போது இது கெட்டியாக இருக்கும்) தேவையான தண்ணீரில் சாம்பார் மேல் பொடியை கரைத்து கலக்கவும்.

அதில் 3 ஸ்பூன் இட்லி மாவு சேர்த்து நன்கு கலக்கவும் , பிறகு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து கொதிக்கவைக்கவும்.

கடைசியாக கொத்தமல்லியை சேர்க்கவும்.

சூடான இட்லி, தோசை, பொங்கலுடன் பரிமாறவும்.


சாம்பார் மேல் பொடி தயாரிக்க


காய்ந்த கொத்தமல்லி/தனியா - 1 கைப்பிடி
கடலை பருப்பு - 1 கைப்பிடி
சீரகம் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5


மேல் சொன்னவற்றை தனி தனியாக வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும்.


இது மூன்று மாதத்திற்கு கெடாது.




இது மற்ற சாம்பார் செய்யும் போது ஒரு ஸ்பூன் சேர்த்து செய்தால் வாசனை கூடும். 



No comments: